முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலை அகற்றம்.. அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


சங்கராபுரம் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தொழுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகில், ஒரு வாரத்திற்கு முன்பு, ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையை போலீசார் இரவோடு இரவாக அகற்றினர். 

அப்போது அங்கு திரண்ட அதிமுகவினர், சிலையை அகற்றக்கூடாது எனக் கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Removal of former Chief Minister Jayalalithaa's statue AIADMK workers protest road blockade


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->