விருதுநகர் தீ விபத்தில் இறந்தவருக்கு நிவாரண நிதி...! ரூ. 4 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு...!
Relief fund for deceased Virudhunagar fire accident Chief Minister orders to provide Rs 4 lakhs
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது பொது நிவாரண நிதி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டதாவது,"விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அருப்புக்கோட்டை, குல்லூர்சந்தை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி (வயது 45) த/பெ.மொக்கைச்சாமி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்"என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Relief fund for deceased Virudhunagar fire accident Chief Minister orders to provide Rs 4 lakhs