ராஜ்யசபா தேர்தல்.. 41 பேர் போட்டியின்றி தேர்வு.!!
rajya sabha candidate 41 elected unopposed
மாநிலங்களவையில் 57 பேரின் பதவிகாலம் வருகின்ற ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே வேட்புமனு பரிசீலனை முடிந்து திரும்ப பெறுவதற்கான காலக்கெடுவை நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், 41 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் அதிகபட்சமாக பாஜகவிற்கு 14 இடங்கள், காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலா 4 இடங்கள், திமுக, பிஜூ ஜனதா தளம் தலா மூன்று இடங்கள் பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தலம் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் தலா ஒரு இடத்தையும், சுயேட்சைஒரு இடத்தை பெற்றுள்ளார்.
English Summary
rajya sabha candidate 41 elected unopposed