மூளை ரத்தக்கசிவு; காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராமேஷ்வர் லால் துடி மறைவு!
rajasthan congress leader death
ராஜஸ்தான்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ராமேஷ்வர் லால் துடி நேற்று இரவு தனது இல்லத்தில் காலமானார்.
2023 ஆகஸ்டில் மூளை ரத்தக்கசிவு காரணமாக கோமா நிலைக்கு சென்ற அவர், முதலில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தில்லி மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடல்நிலை சீராகிய பின்னர் சமீபத்தில் பிகானேரி திரும்பியிருந்தார். இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை இரவு மரணமடைந்தார்.
இந்த செய்தியை முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உறுதிப்படுத்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிகானேரி நாடாளுமன்ற உறுப்பினரான ராமேஷ்வர் துடியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சீராகி வந்த நிலையில், இளம் வயதில் அவர் காலமானது தனிப்பட்ட இழப்பு என கூறினார்.
ராமேஷ்வர் துடி எந்தப் பொறுப்பையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்தவர். நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக அவர் தனது பங்களிப்பை ஆற்றியதோடு, எப்போதும் விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டார் என்றும் கெலாட் குறிப்பிட்டார்.
சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்ந்த அவரின் உடல்நிலை பாதிப்பு அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அவரது ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இறைவன் பலம் அளிக்க பிரார்த்திக்கிறேன் என கெலாட் தெரிவித்துள்ளார்.
English Summary
rajasthan congress leader death