டாக்டர்களின் தவறான சிகிச்சை..சிறுமிக்கு நடந்த கொடூரம்..பெற்றோர் அதிர்ச்சி!
Doctors wrong treatment Cruel act done to a little girl Parents in shock
டாக்டர்களின் தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றப்பட்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பல்லசனா பகுதியை சேர்ந்தவள் 9 வயது சிறுமி வினோதினி. இவள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது வலது கையில் படுகாயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது . அப்போது உடனடியாக பாலக்காடு அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து உடனே டாக்டர்கள் கையில் மாவுக்கட்டு போட்டு உள்ளனர். அதன் பின்னர் சிறுமியின் கையில் வீக்கம் ஏற்பட்டதோடு, நீர் கட்டி உருவாகி சிறுமி வலி தாங்க முடியாமல் துடித்தாள். இதையடுத்து டாக்டர்கள் சிறுமியின் வலது கையை வெட்டி அகற்றி உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் டாக்டர்களின் தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றப்பட்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து விசாரணை குழுவில் டாக்டர்கள் பத்மநாபன், காவ்யா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். மேலும் மேல் சிகிச்சைக்காக சிறுமி கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Doctors wrong treatment Cruel act done to a little girl Parents in shock