ஈபிள் கோபுரம் மூடல்..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
Eiffel Tower closure Tourists disappointed
பிரான்சில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தால் உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.இதனால் அரசாங்கத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அரசு பிரான்சில் பட்ஜெட்டில் அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டன. அப்போது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதற்கிடையே நாட்டின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமிக்கப்பட்டார்.
ஆனால் இவரது நியமனம் மேலும் மக்கள் இடையே போராட்டத்தை தூண்டியது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்கி, நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிந்தனர்.இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.இதை சமாளிக்க அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது.
இதன் காரணமாக உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை அறியாமல் சென்றிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
English Summary
Eiffel Tower closure Tourists disappointed