பாலியல் தொழில் விவகாரம்.. பாஜக பெண் நிர்வாகி கைது.!
Pudhucherry bjp women arrested In Prostitution case
இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பாஜக பெண் நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே பாலியல் தொழில் ரகசியமாக நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் சில நாட்களாகவே போலீசார் அப்பகுதியில் சீருடை அணியாமல் நோட்டம் விட்டு வந்தனர்.
குறிப்பிட்ட இடத்தில் மர்மமான முறையில் ஆண்கள் வந்து செல்வதை போலீசார் கவனித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, திடீரென குறிப்பிட்ட அந்த வீட்டில் போலீசார் நுழைந்தபோது ஆண்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதையும், அங்கே பாலியல் தொழில் நடப்பதையும் கண்டு கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கே பாலியல் தொழில் செய்து வந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் மீட்டனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட புரோக்கராக செயல்பட்ட பாஜக புதுச்சேரி மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் வேளாங்கண்ணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை தேடி வரும் இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி இந்த பாலியல் தொழிலில் தள்ளி இருப்பது தெரியவந்துள்ளது.
English Summary
Pudhucherry bjp women arrested In Prostitution case