சிறப்பு! திருச்செந்தூர் கோவிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம்! - திட்டத்தை தொடங்கி வைத்த பி கே சேகர் பாபு
project provide milk to infants Tiruchendur temple P K Shekhar Babu inaugurated project
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட 10 கோவில்களில், சட்டமன்றத்தில் அறிவித்ததின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இதில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, கோவில் பொது தரிசனப்பாதையில் வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலை வழங்கினார்.
சேகர்பாபு:
அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது,"திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குட முழுக்கு பணிகளை இரவு 8 மணியில் இருந்து 12 மணி வரை ஆய்வு செய்தோம்.நடைபெறுகின்ற கட்டுமான பணிகள், பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற கூடுதல் வசதிகளை கூட்டம் இல்லாத போது ஆய்வு செய்தால்தான் முழு அளவிளான விபரங்கள் தெரியவரும் என்பதால் கூட்டம் இல்லாத நேரமான நேற்று இரவு முழுவதும் ஆய்வு செய்தோம்.
சட்டமன்ற அறிவிப்பின்படி காய்ச்சிய சுடு பால் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் உத்தரவின் பேரில் அறிவித்திருந்த 10 கோவில்களுக்கு இன்றைய தினம் அந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.கோவிலில் நடைபெறுகின்ற திருப்பணிகள், முடி காணிக்கை மண்டபம், அதே போல் நாழி கிணறு செல்லும் பாதையில் உள்ள மண்டபம், அறுபடை வீடுகளை ஒன்றாக பிரதிஷ்டை செய்து அந்த அறுபடை வீடுகளையும் தரிசித்து செல்லுகின்ற சூழல் அதேபோல் பக்தர்கள் தங்கும் விடுதி பக்தர்களுக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கின்ற கியூ லைன், அந்த கியூ லைனில் பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், விழாக் காலங்களில் போக்குவரத்து நிறுத்தும் இடங்கள் சுமார் 4 இடங்களை நேற்று இரவு ஆய்வு செய்தோம்.
சுமார் 20000 வாகனங்கள் வந்தாலும் நிறுத்தக் கூடிய அளவுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த இடங்களையும் ஆய்வு செய்தோம். ஜூலை 7ம் தேதி நடக்கின்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வருகிற பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிப்பிட வசதி அதேபோல் சுகாதார வசதி போதிய மருத்துவ வசதி எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க நேற்று இரவு அனைத்து துறை அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்தோம்.
குறிப்பாக நெடுஞ்சாலை துறையினரும் அதில் பங்கேற்றார்கள் கோவி லுக்கு வரும் சாலைகளில் உள்ள பழுதுகளை வருகிற கும்பாபி ஷேகத்திற்கு முன்பாக அனைத்து பழுதுக ளையும் நீக்கி தருவதாகவும் தேவைப் டுகின்ற இடங்களில் புதிய சாலைகள் அமைப்பதற்கும் அவர்கள் உறுதி அளித்திருக்கின்றார்கள்.அந்த வகையில் முருகன் கோவில் கும்பாபிஷேகம் எல்லாம் வல்ல எங்கள் அப்பன் முருகனுக்கு கடந்த முறை கும்பாபிஷேகம் கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்தது. இன்றும் கலைஞர் வழித்தோன்றல் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது.
கும்பாபிஷேகம் பணிகள் எல்லாம் 90 சதவீதம் முடிந்திருக்கும் என்று சொல்ல முடியாது.எந்த எந்த பணிகள் எல்லாம் குடமுழுக்கிற்கு முன்பு முடியும் எந்த எந்த பணிகள் எல்லாம் கும்பாபிஷேகமிற்கு பின்னால் முடியும் என பட்டியலிட்டு அடுத்த முறை வருகின்றபோது தெளிவாக ஊட கத்துறையினரோடு கலந்து தெளிவாக சொல்ல இருக்கின்றோம்.குட முழுக்கு நடைபெறுகின்ற பணிகளில் குறிப்பாக கோவிலுக்கு வருகின்ற வழிப்பாதையில் இருக்கின்ற பணிகள் முழுவதுமாக கும்பாபிஷேகம் முன்பாக இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என்று ஒப்பந்ததாரர்கள் கூறியிருக்கிறார்கள்.
கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அன்னதான கூடம், முடி காணிக்கை மண்டபம் பக்தர்கள் தங்கும் விடுதி நாழி கிணறு போன்ற பணிகளை விரைவுபடுத்தி உள்ளோம்.அந்த பணிகள் அனைத்தும் கும்பாபிஷேகம் முன்பாக முடிக்கப்படும். மீதம் என்ன பணிகள் உள்ளதோ அது கும்பாபிஷேகம் பின்பு முடிகின்ற பணிகள் பட்டியலிட்டு எடுத்து கூறுகிறோம்.முக்கியமாக கும்பாபி ஷேகம் மட்டும் அல்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதே போல் கிருத்திகை போன்ற நாட்களில் அளவுக்கு அதிகமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றார்கள்.
தேவை கருதி பக்தர்கள் அதிகமாக வருகின்ற கால கட்டங்களில் தேவையான மருந்துவ வசதி போன்ற வற்றையும் கூடுதலாக செய்ய அறிவுறுத்தி இருக்கின்றோம்.எனவே இந்த குடமுழுக்கிற்கு முன்பு எவ்வளவு பணிகள் முடிக்க முடியுமோ அந்த பணிகள் போர்கால அடிப்படையில் நடத்தப்படும்.இந்த ஆய்வு கும்பாபிஷேகத்திற்கு முன்பாக ஒரு 4 முறையாவது அனைத்துத் துறை அலுவலர்களோடு இந்த மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி.யும் அடுத்து நடக்கின்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
அவர்களும்இந்த திருப்பணிக்கு முழு உதவியாக இருக்கின்றார்கள். எனவே இந்த திருப்பணி செம்மையாக நேர்த்தியாக எங்கு பார்த்தாலும் அரோகரா சத்தம் கேட்கின்ற அளவுக்கு இந்த கும்பாபிஷேகம் சீறோடும் சிறப்போடும் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
project provide milk to infants Tiruchendur temple P K Shekhar Babu inaugurated project