நெருங்கும் தேர்தல்: பிரசாரத்திற்கு தயாராகிய பிரேமலதா விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தே.மு.தி.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வருகின்ற 29ஆம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 

அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.கவிற்கு  விருதுநகர், மத்திய சென்னை உள்பட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும் விஜயகாந்த்-பிரேமலதாவின் மகன் விஜயபாஸ்கரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., தி.மு.க போன்ற பிரதான கட்சிகள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிய நிலையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகின்ற மார்ச் 29ஆம் தேதி பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 

மேலும் இந்த பிரசார 29ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி ஏப்ரல் 14ஆம் தேதி விருதுநகரில் நிறைவடையும் விதமாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Premalatha Vijayakanth election campaign


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->