தேமுதிகவின் பொதுச்செயலாளர் ஆனார் பிரேமலதா விஜயகாந்த்!!
Premalatha Vijayakanth becomes General Secretary of DMDK
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். .

விஜயகாந்த் வீடு திரும்பிய அன்றைய தினமே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறும் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிகவின் அடுத்த பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக கள அரசியலில் ஈடுபடாமல் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளராக அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Premalatha Vijayakanth becomes General Secretary of DMDK