போலீஸ் அராஜகம்! மீண்டும் உயிரிழந்த ஒரு குற்றவாளி...! 6 போலீசார் சஸ்பெண்ட்...! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மடப்புரம் காளியம்மன் கோவிலில் பக்தர்களிடம் 10 சவரன் நகைகள் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் கோவில் ஊழியர் 'அஜித்' என்பவரை விசாரணைக்காக காவலர்கள் அழைத்து சென்றனர்.

அந்த காவல் நிலையத்தில் காவலர்கள் விசாரணை நடத்தியபோது இளைஞர் 'அஜித்' பரிதாபமாக  உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடந்து அஜித்தின் உறவினர்கள் தகவலறிந்த உடனே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கோவில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 தனிப்படை காவலர்களை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. ஆஷித் ராவத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கோவில் ஊழியர் உயிரிழந்தது குறித்த வெளிப்படையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.அவ்வகையில், ராஜா,ஆனந்த்,காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police anarchy Another criminal dies 6 police officers suspended


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->