இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையா? கூட்டணி குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் 25-ஆம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு, பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார்.

கூட்டணி குறித்த பிரேமலதாவின் 'கிளியர்' டாக்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டவை:

உரிய நேரத்தில் அறிவிப்பு: கூட்டணி யாருடன் என்பதை இப்போதே அவசரப்பட்டு அறிவிக்க முடியாது; அதற்கான சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்களோ, அவர்களின் விருப்பத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

இது தேமுதிகவின் உட்கட்சி விவகாரம். எப்போது அறிவிக்க வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்பதைத் தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகே உறுதிப்படுத்துவேன் எனத் தெரிவித்தார்.

வதந்திகளுக்கு மறுப்பு:
ஏற்கனவே இரு கட்சிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளியான தகவல்களைப் பிரேமலதா முற்றிலுமாக மறுத்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Premalatha Keeps Alliance Cards Close to Chest DMK ADMK


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->