உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எரிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். 

வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் அந்த வாழ்த்துச் செய்தியில், 

"இந்திய விளையாட்டிற்கு இந்த வெற்றி ஒரு சிறந்த தருணம்; நீரஜ் சோப்ராவின் எதிர்கால சாதனைகளுக்கும் வாழ்த்துகள்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "நீரஜ்சோப்ரா மீண்டும் வரலாற்றை எழுதி உள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் ஆனதற்கு வாழ்த்துகள்.

மிகப் பெரிய மேடையில் அவர் சாதித்து வரும் நிலையான சிறப்பைப் பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMModi CM Stalin Wish Neeraj Chopra 2022


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->