பெரும் அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்.! நள்ளிரவில் நடந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி  அருகே அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார். இவர் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தவர்.

தற்போது அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற மாநில இணைச் செயலராக இருந்துவரும் ஆறுமுக நயினாரின் வீட்டில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

மேலும், இவரின் உறவினர் லட்சுமணன் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும், தூத்துக்குடி மத்தியபக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆறுமுக நயினார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார். அவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol bomb attack in eps supporter home


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->