அமமுகவின் முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார்.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!!
paramasivan iyappan join dmk
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இக்கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட தினகரனும், விருதாச்சலத்தில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்தும் படுதோல்வி அடைந்தனர். இது அக்கூட்டணி தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் நெல்லை நகரம் மாவட்ட செயலாளர் பரமசிவன் ஐயப்பன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் இருந்த பரமசிவன் ஐயப்பன், 2006 முதல் 2011 வரை கவுன்சிலராக இருந்துள்ளார். அதன்பிறகு நடைபெற்ற 2011ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதை எடுத்து, அதிமுகவில் இணைந்த பரமசிவன் ஐயப்பன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்தார். அவருக்கு நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், பரமசிவன் ஐயப்பன் திமுகவில் இணைந்துள்ளார். இது அமமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
paramasivan iyappan join dmk