உறுதிஏற்போம் ஓபிஎஸ்., நினைவுகூர்வோம் டிடிவி., குரலெழுப்புவோம் கமல்.!
ops tweet about Ambedkar Jayanti
சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர். இந்திய அரசியல் சாசனத்தின்தந்தை சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரது வழியில் சமநீதி,சமத்துவம் தழைத்தோங்கிட, ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட உறுதிஏற்போம்." என்று தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய அரசியல் சாசன சிற்பி, எல்லோரும் சம உரிமை பெற பாடுபட்ட போராளி, சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை பிறந்தநாளில் போற்றிடுவோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை நன்றியோடு நினைவுகூர்வோம்." டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகையுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும்’ என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ops tweet about Ambedkar Jayanti