எச்.டி. ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

ரேவண்ணாவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்ததையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அரண்மனைச் சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில் 3 நாட்கள் காவல் முடிந்த ரேவண்ணாவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். அப்போது ரேவண்ணாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். 

இதனை தொடர்ந்து ரேவண்ணாவை மே 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை பெங்களூரு நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HD Revanna court custody extension


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->