ராயபுரத்தில் தோற்றுப்போன ஜெயக்குமார் பேசக்கூடாது! ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பதிலடி!
OPS supporter Pugazhendi reply to Jayakumar
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தேனி மாவட்டத்தில் அதிமுக தோற்றுதற்கு பன்னீர்செல்வம் அவருடைய ஆதரவாளர்கள் தான் காரணம் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி கரூரில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது பதில் அளித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் மட்டும் தான் வெற்றி பெற்றார். ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்த ஜெயக்குமார் பேசக்கூடாது என ஓ.பி.எஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி பதிலடி தந்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பெங்களூர் புகழேந்தி "கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம், தேனி தொகுதியில் அதிமுக வெற்றி பெறவில்லை என ஜெயக்குமார் சொல்கிறார்.
முதலில் அவர் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றாரா? ஒருவர் பற்றி பேசுவதற்கு அதற்கான யோகிதை இருக்க வேண்டும். போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக தோற்றுவிட்டது. தமிழகத்தில் ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
அவ்வாறு அவர் வெற்றி பெறவில்லை என்றால் அதிமுக நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டி இருக்கும். நாடாளுமன்ற மக்களவையில் அதிமுகவின் பெயரை பொறித்த சரித்திரம் ரவீந்திரநாத்தை சாரும். அதைவிடுத்து தோற்றுப்போன ஜெயக்குமார் அனாவசியமாக பேச வேண்டியதில்லை" என பதிலடி தந்துள்ளார்.
English Summary
OPS supporter Pugazhendi reply to Jayakumar