திருவெற்றியூர் மற்றும் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது.? ஓபிஎஸ் கொடுத்த மாஸ்டர் பிளான்.. தயாரான எடப்பாடி.? - Seithipunal
Seithipunal


திருவெற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி சாமி மற்றும் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் அடுத்தடுத்து இறந்ததால், தற்போது திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய இரு தொகுதிகளும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இது நிறைவடைந்ததும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் முடிவில் எடப்பாடி இருப்பதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து 2 தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடத்திவிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இடைத்தேர்தல் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திடம்  ஆலோசனை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சட்டமன்ற இடைத் தேர்தல் தலைமை தேர்தல் ஆணையத்தால் தான் நடத்த வேண்டும், உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் கமிஷன் நடத்தும். அதனால் இந்த இரண்டு தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியுமா என்பதை தேர்தல் அதிகாரிகள் கூற வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops new idea to by election


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->