அதிமுகவில் சசிகலா.. கிரீன் சிக்னல் கொடுத்த ஒபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


கடந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜக காரணம் என அதிமுகவின் முக்கிய தலைவர்கள் குற்றம் சாட்டினர். சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையிலும், அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. 

இந்த தோல்விக்கு காரணம், கட்சி அதிமுக அமமுக என்று இரண்டாக பிரிந்து இருப்பதே எனவும், எப்படி பிரிந்து இருந்தால் எதிர்காலத்தில் தேர்தலில் வெற்றிபெற முடியாது எனவே கட்சியை உடனே ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். 

தேனியில் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த விஷயம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுகவில் அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா மற்றும் டி டி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை எந்தவித நிபந்தனையுமின்றி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட அதிமுக சார்பாக வரும் 5ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பும்படி ஓபிஎஸ் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே போன்ற அனைத்து மாவட்டத்திலிருந்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops meeting for sasikala and ttv dinakaran join admk


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->