சசிகலாவுக்கு ஆப்பு வைத்த இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்.! அதிர்ச்சியில் டிடிவி. தினகரன்.!!
ops and eps new plan
சசிகலா சிறையில் இருந்து இன்னும் இரண்டு மாதத்தில் வெளிவர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா வெளியே வந்ததும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் எல்லோரும் தம் பக்கம் வருவார்கள் என்று டிடிவி. தினகரன் நினைக்கிறார். தற்போது உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களில் பலர் சசிகலாவின் சிபாரிசின் பெயரில்தான் பதவியில் உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.
சசிகலா வெளியில் வந்தாலும் யாருடைய ஆதரவும் அவருக்கு இருக்காது மற்றும் தனித்துவிடப்பட வேண்டும் என்று நினைத்துதான் உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 வருஷம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக பதவியில் இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் இன்னும் 5 வருஷத்துக்கு கட்சியில் எந்த பொறுப்புக்கு வர முடியாது என்று கூறப்படுகிறது.