ஒற்றை தலைமை.. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தனித்தனியே ஆலோசனை.!!
ops and eps consult separately
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பெற்றது. மேலும், இந்த கூட்டத்தில் முடிவுகள் குறித்து தகவல் வெளியானவை, வரும் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சசிகலா ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் நுழைவதை தடுக்க அதிமுக தலைமை எந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
English Summary
ops and eps consult separately