எத்தனை தடை வந்தாலும் பின்வாங்க மாட்டேன்...! மகளிர்க்கு இரட்டிப்பு உதவித்தொகை வாக்குறுதி...! - மு க ஸ்டாலின்
No matter how many obstacles I face I not back down Promise double stipend women MK Stalin
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், தமிழ்நாட்டு மகளிரின் பொருளாதார வலிமையை உயர்த்தும் ‘உரிமைத்தொகை’ திட்டம் தனது உறுதியான வாக்குறுதியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

எந்தவித தடைகள் வந்தாலும், இந்தத் திட்டத்தில் இருந்து ஒரு படியும் பின்வாங்க மாட்டேன் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், தேர்தலை காரணமாக்கி மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை நிறுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும், அதனை முன்கூட்டியே முறியடித்தது நமது திராவிட மாடல் அரசு தான் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் தற்போதைய ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை இரட்டிப்பாக்கி 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
இது என் சகோதரிகளுக்கான உறுதியான வாக்குறுதி என்றும், “வெல்வோம் ஒன்றாக” என்ற முழக்கத்துடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
English Summary
No matter how many obstacles I face I not back down Promise double stipend women MK Stalin