அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என்ற தி.மு.க இதுவரை என்ன செய்தது? சீமான் கொந்தளிப்பு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு கடுமையான சோதனையாக அமைந்தது. உடை பரிசோதனை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள், அவர்களின் மனநிலையை பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த செயல்முறைகளை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை. இந்த தேர்வு முறையால் பயிற்சி மையங்கள் மட்டுமே லாபமடைகின்றன. அமெரிக்கா சார்ந்த தனியார் நிறுவனம் தேர்வை நடத்துவது சோகம்; நம்மால் இதை நடத்த முடியாதா?

ஒரு மாணவனைத் தேர்வு செய்ய முடியாத ஒரு முறை, எப்படி நாட்டிற்கு தலைவரை தேர்வு செய்யும்? நீட் தேர்வால் தரமான மருத்துவர் உருவாகும் என்பது முழுக்க தவறான வாதம். இந்த முறை கிராம மாணவர்களின் கனவுகளை சிதைத்துவிட்டது. வசதியுள்ள மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு, ஆனால் வறுமையில் வாழும் மாணவர்களுக்கு ஏன் வாய்ப்பு இல்லை?

தமிழ்நாட்டில் மட்டும் கடுமையான சோதனைகள் ஏன்? சில மாநிலங்களில் புத்தகத்துடன் தேர்வு எழுதும் நிலை, காவலர்களின் மேற்பார்வை என பல விதமான மாறுபாடுகள் உள்ளன. மாணவர்களின் உடைகளைப்போலவும் மூக்குத்திகளைப்போலவும் எதையும் சந்தேகப்பட்டு, உடை கழிக்கச் சொல்லும் நிலை நீட் தேர்வை சுமூகமாக எழுதிய மனநிலையை சீர்குலைக்கும்.

அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது? நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி திமுக வாங்கிய கையெழுத்துக்களை எங்கே கொடுத்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Neet exam Seeman Naam Thamizhar katchi DMK Condemn


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->