பகீர்! தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தை ஆளும்...! அதில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும்...! - அமித்ஷா திட்டவட்டம் - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை மந்திரி 'அமித்ஷா' பிரபல ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்று அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் பதிலளித்ததாவது,"கேள்வி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது, தங்களின் அழுத்தத்தால்தான் என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே?. மேலும் அவர்கள் அரசாணையில் சாதி விவரங்களை சேர்க்கவில்லை என்கிறார்களே?.


பதில்: எந்த அழுத்தமும் இல்லை. மோடி அரசு சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி உள்ளது. பின்தங்கிய சமூகங்கள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு பட்ஜெட்டில் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் கட்சியை போன்று துரோகம் செய்தது யாரும் இல்லை. கலேல்கர் ஆணைய அறிக்கையை மறைத்தது காங்கிரஸ்தான். மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இல்லாத அரசாங்கம்தான் கொண்டு வந்தது. அப்போது அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ராஜீவ்காந்தி பேசிய உரை வரலாற்றில் மிக நீளமான உரையாகும். அது இன்னும் ஒரு சாதனையாக இருக்கிறது.
கேள்வி: பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் விரக்தியை காட்டுகிறதா?.
பதில்: காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் சுமுகமான சூழலை கெடுக்கவும், பெருகிய சுற்றுலாவையும், பயங்கரவாதத்தில் இருந்து விலகிய இளைஞர்களையும் பாதிக்கவே பஹல்காம் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. காஷ்மீர் இளைஞர்கள் இந்த தீய திட்டத்தை புரிந்துகொண்டு விட்டனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களில் முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. இதுபோன்ற தேசிய ஒற்றுமை இதற்கு முன்பு அங்கே காணப்படவில்லை. 370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு, கற்கள் வீச்சு 2024-ல் பூஜ்ஜியமாகி உள்ளது. இதுவே 2010-ல் 2,654 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.35 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. 2022-ல் 1.88 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில், 2023-ல் இது 2.11 கோடியாக உயர்ந்துள்ளன. 2004-14-ம் ஆண்டு காலகட்டத்தில் 7,217 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், 2014-25 காலகட்டத்தில் இது 67 சதவீதம் குறைந்து 2,347 ஆக குறைந்துள்ளன. பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்பு 1,060-லிருந்து 42 சதவீதம் குறைந்து 616 ஆக குறைந்துள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பு 1,769-ல் இருந்து 77 சதவீதம் குறைந்து 402 ஆக குறைந்துள்ளன. ரூ.12 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கடந்த 1½ ஆண்டுகளில் ஒரு இளைஞரும் பயங்கரவாத இயக்கத்தில் சேரவில்லை.
கேள்வி: எல்லைப்பாதுகாப்பு உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊடுருவல்கள் நடைபெறும் பகுதிகளில் வேலி அமைப்பதாக கூறினீர்கள். அதன் நிலை என்ன?
பதில்: பாரதம் இப்போது எல்லைப் பாதுகாப்பில் பலமாக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 228 கிலோ மீட்டர் தூரத்திற்கும்., இந்தியா-வங்காளதேச எல்லையில் 399 கிலோ மீட்டர் தூரத்திற்கும்., இந்தியா-மியான்மர் எல்லையில் 9 கி.மீ. வரையும் வேலி அமைக்கப்பட்டு உள்ளது.
கேள்வி: நீங்கள் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறீர்கள்? என்று கூறப்படுகிறது.
பதில்:நான் யாரையும் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களது கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்.
கேள்வி:தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி குறித்து நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா?.
பதில்:என் நம்பிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது.
கேள்வி:தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா?
பதில்:எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜ.க. கட்சியின் பங்கு இருக்கும்.
கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?
பதில்: தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்.
கேள்வி:ஆங்கில மொழிக்கு எதிராக கடுமையாக பேசி இருக்கிறீர்களே?.
பதில்: நான் என்ன சொன்னேன் என்றால், பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும். 2047-க்குள் இந்தியர்கள் அனைவரும் தங்களது பிராந்திய மொழிகளில் பேச வேண்டும் என்பதே என் நோக்கம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. தமிழ்மொழியின் முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும். அதுபோலவே அசாமிஸ், குஜராத்தி, மராத்தி ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வேண்டும்.
கேள்வி:தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆந்திரப் பிரதேசத்திற்கு வழங்கியது போல் சிறப்பு மேம்பாட்டு நிதி தமிழகத்திற்கு கிடைக்குமா?
பதில்: தமிழகத்துக்கு ஏற்கனவே நாங்கள் நிறைய வழங்கியுள்ளோம். மேலும், ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைந்தால், நிச்சயமாக எங்களது பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேள்வி: தேச எல்லைகளில் ஊடுருவல் என்பதில் இந்தியா ஒரு தர்ம சத்திரம் இல்லை என்பதை நிரூபித்து வருகிறீர்களே?
பதில்:தேச எல்லை வழியாக எதற்காகவும் யாராக இருந்தாலும் ஊடுருவும்போது, அந்த நாடு தர்ம சத்திரமாக செயல்பட்டால் செழித்தோங்கி வளர முடியாது. ஊடுருவல்காரர்கள் விஷயத்தில் நாங்கள் எங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறோம்.
கேள்வி: பா.ஜ.க. கட்சியின் தேசிய தலைவராக யார் வரப்போகிறார்கள்?
பதில்:இன்னும் அது முடிவாகவில்லை. ஆனால் மிக விரைவில் முடிவு எடுக்கப்படும்.
கேள்வி: தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த இடம் எது?. உங்கள் விருப்ப உணவு என்ன?.
பதில்:எனக்கு சாம்பார் சோறு மிகவும் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த இடம் ராமேசுவரம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

National Democratic Alliance rule TN BJP will play an important role in it Amit Shahs manifesto


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->