ஸ்டாலினை போன்று நானும் வேதனைகளை அனுபவித்தேன்.. நாராயணசாமி ஓபன் டாக்..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் பொட்டியில் பாம்பு அடங்குவது போல அடங்கி இருக்கிறார்கள். அரசை பற்றி யாரும் பேசுவதில்லை. இதற்கு சூத்திரதாரி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆளுநர்களை தூண்டி விடுகின்றனர். 

தமிழ்நாட்டைப் பாருங்கள். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி 5 வருடம் என்னை தூங்க விடவில்லை. கோப்புகளை அனுப்பினால் கிரண்பேடி திருப்பி அனுப்புவார். எதிர்க்கட்சிகள் என்னைக் கேள்வி கேட்பார்கள். என்னால் வெளியில் சொல்ல முடியாது. இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அனுபவிக்கும் வேதனைகளை நான் ஐந்து வருடம் அனுபவித்தேன்.

கிரண்பேடியிடம் சண்டை போட்டாவது காரியத்தை சாதித்தேன். ஆனால் தமிழிசை முதலமைச்சர் ரெங்கசாமிக்கு வெல்லத்தை கொடுத்து சாகடிக்கிறார். அண்ணன் அண்ணன் என சொல்லி நன்றாக பேசுகிறார். ஆனால் கோப்புகளுக்கு கையெழுத்து போடுவதில்லை.

இவரும் தங்கச்சி என சொல்கிறார். அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் ஒரு வேலையும் செய்வதில்லை. புதுச்சேரி அரசு நிதி பற்றாக்குறை நிலவுகிறது. எப்பொழுது இந்த அரசு திவாலாகும் என தெரியவில்லை. உண்டியல் வசூல் செய்தாவது ஆளுநர் தமிழிசைக்கு தனி விமானம் ஏற்பாடு செய்கிறோம். தயவுசெய்து தெலுங்கானாவிற்கு சென்று விடுங்கள்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanasamy said that I suffered like MKStalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->