No use! தமிழகத்திற்கு 8 முறை வந்தும் மோடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை... அமித்ஷா வந்து என்ன செய்யப் போகிறார்...? - ஆர் எஸ் பாரதி
Modi could not do anything even after coming to TN 8 times What is Amit Shah going to do when he comes R S Bharathi
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று உரையாடினார்.

ஆர்.எஸ்.பாரதி:
அதில் அவர் தெரிவித்ததாவது,"எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொய் மட்டுமே பேசி வருகிறார். இந்தியாவிலேயே மோடியை எதிர்த்து மோடியே அலறும் விதத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவது தமிழ்நாட்டில் தான்.அனைவருக்கும் வழிகாட்டியாக தமிழக முதலமைச்சர் விளங்கி கொண்டிருக்கிறார்.
பெண்களுக்கான ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.அமித்ஷா தமிழகம் வருவதால் பயப்படுவதாக சொல்கின்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது, மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்தார். ஒன்றும் செய்யமுடியவில்லை.
அமித்ஷா வந்து என்ன செய்யப்போகிறார்? கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி அடைந்ததை போன்று வருகிற சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி அடையும்.
அதற்கான மக்கள் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
Modi could not do anything even after coming to TN 8 times What is Amit Shah going to do when he comes R S Bharathi