மிலாடி நபி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்...! 'அன்பையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்போம்' - முதலமைச்சர் விஜய்
Milad un Nabi festival celebrated with enthusiasm Let cultivate love and harmony Chief Minister Vijay
நபிகள் நாயகம் பிறந்தநாளை நினைவுகூரும் புனிதமான மிலாடி நபி பண்டிகை, தமிழகம் முழுவதும் இன்று உற்சாகத்துடனும் ஆன்மிக உணர்வுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் அன்புடன் சந்தித்து, கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகள், பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கி பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
மிலாடி நபி பண்டிகையையொட்டி, முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்த நன்னாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தனது இதயம் நிறைந்த இனிய மிலாடி நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதகுலத்தின் மீது அன்பு செலுத்துதல், ஏழை எளிய மக்களிடம் இரக்கம் காட்டுதல், அனைவரையும் சமமாக மதித்தல், சகோதரத்துவத்துடன் வாழ்தல் உள்ளிட்ட உயரிய பண்புகளை நபிகள் நாயகம் தனது போதனைகள் மூலம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகம் காட்டிய அன்பு, அமைதி, சமத்துவம் மற்றும் நல்லிணக்கப் பாதையைப் பின்பற்றி, சமூகத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்த அனைவரும் உறுதி ஏற்போம் என்றும் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த புனிதமான நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சி, நலன், வளம் பெருகி, அன்பும் அமைதியும் நிறைந்திட வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
English Summary
Milad un Nabi festival celebrated with enthusiasm Let cultivate love and harmony Chief Minister Vijay