மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு.!! - Seithipunal
Seithipunal


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று 10 மணிக்கு சென்னையில்நடைபெற்று வருகிறது. கட்சியில் காலியாக உள்ள தலைமை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது.

2 துணைப் பொதுச்செயலாளர்கள், ஒரு தலைமைக் கழகச் செயலாளர் மற்றும் ஒரு தணிக்கைக் குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவங்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு முழு அதிகாரம் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk new post for durai vaiko


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->