''காவல்துறை சீரமைக்கப்பட வேண்டும்; சிறைகளில் மரணம் தமிழகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது''; மாணிக்கம் தாகூர் ..! - Seithipunal
Seithipunal


மேகேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இருக்க வேண்டும். இது நம் ஜீவாதார பிரச்சினை. அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகரில் இன்று கடந்த கல்வி ஆண்டில் 10-ஆம் மற்றும் பிளஸ்-1 தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 'காமராஜர் விருது வழங்கும் விழா' நடைபெற்றது. விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு 250 பள்ளிகளைச் சேர்ந்த 1,200 மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது; 13 ஆண்டுகளாக காமராஜர் பெயரில் கல்வி விருது வழங்கும் விழா நடை பெறுகிறது. அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அரசு, தனியார், அரசு உதவிபெறும் 250 பள்ளிகளில் 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 1,200 பேருக்கு விருதுநகர் வழங்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி, மதுரையில் 880 மாணவர்களுக்கு இன்று விருதுகள் வழங்குகிறோம் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இருந்த விருதுகளை வழங்குவதாக தெரிவித்தார்.

அத்துடன், கூடங்குளத்தில் தகவல்கள் வெளியான சம்பவம் மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும், இந்த மத்திய அரசு தேதிய பாதுகாப்பில் எவ்வளவு மெத்தனமாக உள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது என்று சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகம் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அத்துடன், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இருக்க வேண்டும். இது நம் ஜீவாதார பிரச்சினை. அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்று தெரிவித்தார். இது இதுதொடர்பாக  முதல்வர் குழு அமைக்கலாம் என்றும், மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும், அரசியல் பார்க்காமல் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இஸ்ரோவில் பல விஞ்ஞானிகள் வெளியேறுவது தடுக்கப்பட வேண்டும். அது அதிர்ச்சிக்குரியது. பிரதமர் இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் எழுப்புவோம் என்றும் அறிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போராட்டம் நடத்தக் கூடாது என்பதும் ஜனநாயகத்துக்கு எதிரானது. நாங்கள் கேள்வி கேட்க நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறியதோடு, நீட் காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு விவாதம் கிடையாதா? இது குறித்தும் பேசவுள்ளதாகவும், அரசே இதை எதிர்ப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அதை மீறி நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

அத்துடன் , சிறைகளில் மரணம் என்பது தமிழகத்துக்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்துகிறது. இச்சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் களங்கம் ஏற்படுகிறது. காவல் துறை சீரமைக்கப்பட வேண்டும். இது நமது கடமை என்று செய்தியாளர்களிடம் பேசினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manickam Thakur says Tamil Nadu Police Department should be reformed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->