பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.!!
mamata banerjee warning to bjp
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் பாஜக ஆளும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார் சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே .
சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித் துறை அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே, அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உத்தவ் தாக்கரே மற்றும் அனைவருக்கும் நீதி வேண்டும். இன்று நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அதனால் பணபலமும், மாபியா பலத்தை பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருந்து சென்றாக வேண்டும்.
அப்போது உங்கள் கட்சியும் யாராவது உடைக்கலாம். இது தவறு. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மகாராஷ்டிராவிற்கு பிறகு மற்ற மாநில அரசுகளையும் கவிழ்ப்பார்கள். மக்களுக்கு நீதி வேண்டும் தெரிவித்துள்ளார்.
English Summary
mamata banerjee warning to bjp