எல்லாம் தெரிந்த கதைதான்.! தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டார்கள்.!! பாஜகவை தாக்கிய கார்கே.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 7:30 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறையின் இந்த சோதனைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கு தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழக கல்வி அமைச்சர் டாக்டர் கே.பொன்முடிக்கு எதிராக அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளின் முக்கியமான கூட்டத்திற்கு முன்பு நடத்தியதை கண்டிக்கிறோம். எதிரணியினரை மிரட்டுவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் இது மோடி அரசின் யூகிக்கக்கூடிய கதையாக மாறிவிட்டது.

ஆச்சரியம் என்னவென்றால், சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தில் பாஜக திடீரென விழித்துள்ளது. மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. ஜனநாயகத்தை மிதிக்க இந்த கோழைத்தனமான தந்திர உபயோகங்களை சளைத்திருக்க மாட்டார்கள்" என விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mallikarjun kharge comments on DMK minister Ponmudi house ed raid


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->