#BigBreaking || பெரும் அதிர்ச்சி., 10 அமைச்சர்கள், 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா.! - Seithipunal
Seithipunal


மகராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்களுக்கும், 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனாவால் 16,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 220 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,48,38,804 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,861,579 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 481,486 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில்  22,775 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 8,949 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  406 நோய்த்தொற்றால் இறந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 1,04,781 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இந்நிலையில் ,மகாராஷ்டிர மாநிலத்தில் 10 அமைச்சர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளதாக, அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் செய்தியாளரை சந்தித்து தெரிவித்துள்ளார்.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastra minister and mla affected corona jan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->