2008 கலவர வழக்கு: ராஜ் தாக்கரே நீதிமன்றத்தில் ஆஜர்!
Maharashtra Raj Thackeray appeared court 2008 rioting case
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் இன்று (டிசம்பர் 11) தாணே மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2008ஆம் ஆண்டில், வட இந்தியர்களுக்கு எதிரான ராஜ் தாக்கரேவின் பேச்சு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக ராஜ் தாக்கரே மீதும், அவரது கட்சித் தொழிலாளர்கள் பலரின் மீதும் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
ராஜ் தாக்கரே மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 109 (தூண்டுதல்) மற்றும் 117 (பொதுமக்கள் அல்லது பத்துக்கும் மேற்பட்டோர் குற்றத்தைச் செய்யத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி, குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று ராஜ் தாக்கரேவிடம் கேட்டார். அதற்கு அவர், "இல்லை" என்று பதிலளித்தார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
Maharashtra Raj Thackeray appeared court 2008 rioting case