மதுராந்தகம் பொதுக்கூட்டம்: "எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்கிறோம்" - டிடிவி தினகரன் அதிரடி! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதல் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) ஆகியோருடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.

கசப்புகளை மறந்த கூட்டணி: "எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான்; ஆனால் கட்சி மற்றும் மக்கள் நலன் கருதி, எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு பிரதமரின் அழைப்பின் பேரில் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

திமுக மீது கடும் சாடல்: தமிழகம் தற்போது "கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் புகலிடமாக" மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், மக்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வாரிசு அரசியல் எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதல்வராக்க முயற்சிப்பதாகவும், அதை முறியடித்து உண்மையான 'மக்களாட்சியை' மலரச் செய்யத் தொண்டர்கள் உழைப்பார்கள் என்றும் உறுதியளித்தார்.

வசந்த பஞ்சமி நன்னாளில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான விதை தூவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தினகரன், 2021-ல் தவறவிட்ட ஆட்சியை மீண்டும் அமைக்க எவ்வித தயக்கமுமின்றி கூட்டணியில் உறுதியாக இருப்போம் என முழங்கினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maduranthakam NDA Rally TTV Dhinakaran Embraces EPS for Peoples Rule


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->