நெல்லை பாஜக வேட்பாளருக்கு ஆப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


நெல்லை பாஜக வேட்பாளர் நைனா நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நெல்லைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை நாளை விசாரணை செய்வதாக அறிவித்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் நைனார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. வழக்கில் நீரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் நைனா நாகேந்திரன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அமலாக்கத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. 

ஆனால் அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் நான்கு கோடி ரூபாய் எடுத்துச் சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது உள்ளதால் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மாதம் நாளை சென்னை உயர் நதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc Case against BJP candidate nainar hearing tomorrow


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->