என்னது தம்பியா?! பெண்ணியம் கண்ணியம்னு பொங்குன என்னை நானே செருப்பால..! நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் பதிவு! - Seithipunal
Seithipunal


கடந்த சில சில தினங்களுக்கு முன்பு பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவாவும் செல்போனில் மோதிக்கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அந்த ஆடியோவில் பேசிய சூர்யா சிவா டெய்ஸி சரணை தகாத வார்த்தைகளால் பேசி இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இருவரும் நேற்று ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெய்சி சரண் "சூர்யா சிவா எனது தம்பி போலவே பழகினார். இந்த விவகாரத்தை இருவரும் பரஸ்பரம் பேசி இத்துடன் முடித்துக் கொள்வது என முடிவு செய்துள்ளோம். நாங்கள் இருவரும் அக்கா தம்பி போலவே தொடர விரும்புகிறோம்" என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெய்சி சரண் பேசியது குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். 

அந்த பதிவில் "என்னது தம்பியா?! அரை மணி நேரம் அசிங்கமா பேசினவர் அரை பைசாவுக்கு விளக்கு அறிக்கை கூட விடலை. அப்போ பேசுனது எல்லாம் கரெக்ட்டுதான் போல. டெய்சி சரணுக்காக பெண்ணியம் கண்ணியம்னு பொங்கின என்னை நானே செருப்பால... இனி பிஜேபி ஆளுங்க யாராவது சகோதரியின் கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் ! #உவ்வே" என பதிவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kasturi Twit Be careful if bjp members calls sister


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->