கர்நாடக பாஜக இளைஞரணி உறுப்பினர் வெட்டி படுகொலை - முதலமைச்சர் கடும் கண்டனம்.
Karnataka BJP youth member hacked to death Chief Minister strongly condemns
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஆளும் பாஜகவின் இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு நேற்று மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பெல்லாரே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பா.ஜ.க இளைஞரணி உறுப்பினர் படுகொலையை கண்டித்து தட்சிண கன்னடா பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரவீன் நெட்டாரு படுகொலைக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
"பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயல். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இதற்கு விரைவில் நீதி கிடைக்கும்". என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Karnataka BJP youth member hacked to death Chief Minister strongly condemns