IUML கட்சிக்கு ''ஏணி'' சின்னம்: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.!
IUML party ladder symbol
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சியான தி.மு.க தீவிரமாக தயாராகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஏணி சின்னம் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கோரிக்கையை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஏணி சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.