#தமிழகம் | கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முக்கிய புள்ளியாக இருந்தவர் வீட்டில் ஐடி ரைடு! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் : புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பாண்டித்துரை என்பவர், கடந்த அதிமுக  ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரராக இருந்து வந்துள்ளார்.

அப்போது, ரிப்லெக்ட் விளக்குகள், நெடுஞ்சாலை நடுவே செடிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்துவந்துள்ளார்.

இந்த பணிகளில் பல கோடி முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், இன்று காலை முதல் திருச்சி, மதுரையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பாண்டித்துரை வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சரியாக காலை 8 மணிக்கு, பெரியார் நகர் பகுதியில் உள்ள பாண்டித்துரை வீட்டில் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள், தற்போதுவரை சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், பாண்டிதுரையின் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் பாண்டித்துரையின் மெது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் அரசு ஒப்பந்ததாரராக இருந்தவர் வீட்டில் நடக்கும் இந்த சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IT Raid in pudukottai pandithurai home


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->