மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா 5வது பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது - ஜே.பி.நாட்டா!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் 7கட்டங்களாக நடைபெறும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அதான் தொடர்ந்து இரண்டாம் கட்ட பாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் 88 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாட்டை யாராலும் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் மாற்ற முடியாது என்று மக்கள் பேசிக்கொண்டிருந்தனர்.ஆனால், பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பொருளாதாரம் நாடுகள் எல்லாம் சரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா மட்டும் நட்சத்திரம் போல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது இந்தியா உலகின் பொருளாதார நாடுகளில் 5வது இடத்திற்கு முன்னேறிவிட்டது. மோடி மீண்டும் பிரதமர் ஆனால், இந்தியா உலகின் 3வது பொருளாதர நாடாக உயரும் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India fifth economic country


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->