#BigBreaking | ஹிஜாப் தடை வழக்கில் திடீர் திருப்பம் - இரு தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள்! - Seithipunal
Seithipunal


கர்நடாக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கில் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. 

மேலும், கர்நாடக மாநில அரசு தரப்பிலும், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன.  

இந்நிலையில், இந்த ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகள் வழங்கியுள்ளனர். நீதிபதி ஹேம்ந்த் குப்தா தடை சரி என்றும், மற்றொரு நீதிபதியான சுதான்சு துலியா ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தும் தீர்ப்புளித்துள்ளார்

ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக, உச்சநீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hijab case SC order Oct 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->