மைக் ஆஃப், உண்மைக்கு புறம்பான ஆளுநர் உரை! ஏன் வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..? ஆளுநர் மாளிகை விளக்கம்!
Governor Walks Out of TN Assembly for 4th Consecutive Year
2026-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 20) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
வரவேற்பு: அவைக்கு வருகை தந்த ஆளுநரைச் சபாநாயகர் அப்பாவு மலர்க்கொத்து மற்றும் கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப் புத்தகத்தை வழங்கி மரபுப்படி வரவேற்றார்.
வெளிநடப்பு: அவை 'தமிழ்த்தாய் வாழ்த்துடன்' தொடங்கிய உடனே, ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார்.
காரணம்: தேசிய கீதத்தை அவையின் தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்கவில்லை, அவமதிக்கும் விதமாக மைக் ஆஃப் செய்யப்பட்டது, முதலீடு குறித்து ஆளுநர் உரையில் பொய்யான தகவல் உள்ளிட்டவையே தனது வெளிநடப்பிற்கான காரணமாக மீண்டும் முன்வைத்துள்ளார்.
தொடரும் மோதல் போக்கு (2023 - 2026):
2023 உரையில் சில பகுதிகளைத் தவிர்த்தார்; அரசு தீர்மானம் மூலம் உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
2024 & 2025 தேசிய கீத விவகாரத்தைச் சுட்டிக்காட்டி உரையைப் புறக்கணித்து வெளியேறினார்.
2026 இம்முறையும் உரையை வாசிக்க மறுத்து, 4-வது முறையாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
அரசியல் தாக்கம்:
ஆளுநர் வெளியேறியதைத் தொடர்ந்து அவையில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. ஆளுநரின் இந்தச் செயல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என ஆளுங்கட்சியினர் விமர்சித்து வரும் வேளையில், தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என ஆளுநர் தரப்பு உறுதிபடத் தெரிவிக்கிறது.
English Summary
Governor Walks Out of TN Assembly for 4th Consecutive Year