ஓரவஞ்சனை ஒன்றிய அரசு! சீரழிந்த தமிழ்நாட்டை 4 ஆண்டில் மீட்டோம்...! - முதலமைச்சர்
fraudulent Union Government We rescued degraded Tamil Nadu in 4 years Chief Minister
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருப்பத்தூரில் மண்டலவாடியில் ரூ.174 கோடி மதிப்புள்ள முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.273.83 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 10,00,168 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.68.76 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"நேற்று காட்பாடிக்கு ரெயிலில் வந்து இறங்கியதில் இருந்து மக்களின் வரவேற்பால் மனம் நிறைந்துள்ளேன். இதுவரை இந்த அளவுக்கு கூட்டத்தை பார்த்ததே கிடையாது என துரைமுருகன் தெரிவித்தார்.
ஆம்பூர் பிரியாணி என பல சிறப்பு கொண்ட திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி.தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாத கடந்த கால ஆட்சியால் சீரழிந்த தமிழகத்தின் வளர்ச்சியை 4 ஆண்டில் மீட்டெடுத்துள்ளோம்.ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசால் கூட நமது வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.
மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்.2026, 2031, 2036 என என்றுமே தி.மு.க. தான் நாட்டை ஆளப்போகிறது என இறுமாப்புடன் பெருமையுடன் தெரிவிக்கிறேன்.தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி பரவ வேண்டும் என்பதே நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
fraudulent Union Government We rescued degraded Tamil Nadu in 4 years Chief Minister