முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிமுகவில் இணைந்தார்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 

குறிப்பாக அமமுக, பாஜகவை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், அமமுகவின் அருந்ததியர் பேரவையின் மாநிலச் செயலாளருமான இராமசாமி தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former IAS officer ramasamy joined in AIADMK


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->