தெறிக்கவிடும் 5 மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இவற்றில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக போட்டியிட்டன. ஆனால், தெலுங்கானாவில் இந்த இரண்டு தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் இணைந்ததால் மும்முனை போட்டி நிலவியது. 

இதேபோல், மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணியும், சோரம் மக்களின் இயக்கமும் நேரடியாக மோதிக்கொள்ள, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் சேர்ந்து களத்தை வலுப்படுத்தியது.

இந்த மாநிலங்களில் கடந்த மாதம் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், மிசோரமை தவிர மீதமுள்ள நான்கு மாநிலங்களில் பதிவான வாக்குகளும் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five states election vote counting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->