பிப்ரவரி 14 ஆம் தேதி விடுமுறை.. அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநில சட்டமன்றத் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. 

அதன்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதியும், 7 ஆம் கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி வருகின்ற 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வருகிற 14-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் பொது மக்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

feb 14 local holiday for goa


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->