அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான்.! இன்று மாலை வெளியாகும் அறிவிப்பு.! பீதியை கிளப்பும் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தர்மபுரியில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின், சட்டமன்ற தேர்தல் மற்றும் வளர்ச்சி குறித்த ஆய்வு கூட்டத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பி.பழனியப்பன், கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அப்போது, சசிகலா சிறையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம். கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சசிகலா சிறையில் இருந்து எப்போது வருவார் என்ற ஏக்கம் அதிகரித்துள்ளது.

அவரின் வருகையை நோக்கி கட்சியினர் மற்றும் தமிழகமே காத்துள்ளது. சிறையில் இருந்து சசிகலா எப்போது வருவார் என்ற தகவலை சிறைத் துறையினர் எந்நேரம் வேண்டுமானாலும் தெரிவிப்பார்கள். அது இன்று மாலையே தெரிய வரும். எந்த நேரத்திலும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார். 

அதிமுகவின் பொதுச் செயலாளராக இன்று வரை சசிகலா தான் இருந்து வருகிறார். நாங்கள்தான் அதிமுக. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின் அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அதற்கான ஒரே ஒரு தகுதி படைத்தவர் சசிகலா மட்டும்தான். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டது அதிமுகவை மீட்கத் தான்." என்று முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளருமான பி பழனியப்பன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister palaniyappan press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->