அதிமுகவின் முக்கிய புள்ளிகள் கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுகின்ற காரணத்தால்,

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, R. ரவிக்குமார் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்), S. அமுதா (சத்தியமங்கலம் நகர மகளிர் அணி இணைச் செயலாளர்), K. சரவணன் (அரியப்பம்பாளையம் பேரூராட்சி புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்), A. அம்சவள்ளி (சத்தியமங்கலம் நகர 24-ஆவது வார்டு இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்) K.M. கருப்புசாமி (மணியக்காரன்பாளையம், 11-ஆவது வார்டு, காசிபாளையம் பேரூராட்சி), K. பாக்கியவதி (க/பெ. எஸ்.ஆர். கிருஷ்ண சாமி, நேரு நகர், 2-ஆவது வார்டு, அரியப்பம்பாளையம் பேரூராட்சி), P. பிரபு, (10-ஆவது வார்டு, சத்தியமங்கலம் நகரம்), R. நதியா, (க/பெ. ராஜமாணிக்கம், இந்திரா நகர், 9-ஆவது வார்டு, காசிபாளையம் பேரூராட்சி).

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

erode district admk members dismissal for party


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->