எடப்பாடியால் ஓபிஎஸ்ஸிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!
eps shock for ops
பத்து நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ் மகன் விருதினைத் தொடர்ந்து, இரண்டாவதாக சர்வதேச வளரும் நட்சத்திரம்- ஆசியா விருதும் பெற்றுள்ளார். இன்னுமும் கூட பல விருதுகள் அவருக்காகக் காத்திருப்பதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி என்ன தான் ஆட்சி அதிகாரம் இருந்தாலும் தற்போது வரை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளில் பெரும்பாலனோர் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என ஒரு ரிப்போர்ட் இ.பி.எஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில வாரங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். இமேஜ் பெருகுவதை இ.பி.எஸ். விரும்பவில்லையாம். அதனால் அமெரிக்காவிலிருந்து ஓ.பி.எஸ் தமிழகம் திரும்பியதும் அவருக்குத் தரப்படும் முக்கியத்துவத்தையும் பழையபடி குறைக்க எடப்பாடி திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவை எடுப்பார் என தெரிகிறது.